டெல்லியில் குறையும் சராசரி ஆயுட்காலம் அதிர்ச்சியூட்டும் ஆர்பிஐ அறிக்கை
December 17, 2025

வட இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆயுட்காலத்தை பெருமளவு பாதித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் டெல்லிவாசிகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 1.7 ஆண்டுகள் குறைந்துள்ளது. மாசுபாடு, நீரின் தரம் குறைதல் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவையே ஆயுள் குறைவதற்கு முக்கிய காரணங்களாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அதே சமயம், மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் காரணமாக உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் நிலவும் இந்த அபாயகரமான சூழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.