சாலையில் கிடக்கும் பணம்: அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

சாலையில் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை பலர் பார்த்திருப்போம். அப்போது அந்த பணத்தை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும். இது நல்லதா, கெட்டதா என வாஸ்து மற்றும் ஜோதிடம் தெளிவாக விளக்குகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சாலையில் கிடக்கும் பணம் குறிப்பாக நாணயம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அந்த நாணயத்தை பார்த்தால் அதனை புறக்கணிக்க கூடாது. அதை எடுத்து வீட்டில் உள்ள பூஜை அறையில் வைக்க வேண்டும். இது எதிர்காலத்தில் நல்லதொரு அதிர்ஷ்டம் நம்மை நோக்கி வருகிறது என்பதற்கான அறிகுறியாக வாஸ்து நம்புகிறது.
இதே சமயம், அந்த பணத்தை செலவழிக்க கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது. பலர் அதை ஏழைகளுக்கோ, கோயிலுக்கோ காணிக்கையாக செலுத்துவார்கள். இது நல்லதொரு வழிமுறையாகும். எனவே, சாலையில் கிடக்கும் பணத்தைப் பார்த்தால் அதை எடுத்து பூஜை அறையில் வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்பது வாஸ்து நம்பிக்கை.