கோவை லூலு மாலில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட சிறுவர்களுக்கு நேர்ந்த கதி அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்
March 18, 2026

கோவை லூலு மாலில் உள்ள உணவகத்தில் சிக்கன் லாலிபாப் உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட்ட இரண்டு சிறுவர்களுக்குத் திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உணவில் கடுமையான துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சசிகுமார், தரம் குறைந்த இறைச்சி பரிமாறப்பட்டதே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து உணவக நிர்வாகம் அலட்சியமாகப் பதிலளித்ததால், பாதிக்கப்பட்ட தந்தை உணவுப் பாதுகாப்புத் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தற்போது தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.