கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட்: கேகேஆர் – ஆர்சிபி போட்டி நடக்குமா?

கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட்: கேகேஆர் – ஆர்சிபி போட்டி நடக்குமா?

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதவுள்ள நிலையில், கொல்கத்தாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி நடைபெறுமா என்பது குறித்து ரசிகர்கள் உறுதியற்ற நிலையில் உள்ளனர்.

2008 ஐபிஎல் தொடக்க போட்டியில் கேகேஆர் – ஆர்சிபி அணிகள் மோதியது வரலாற்று நிகழ்வாக இருந்தது. அப்போது பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக விளையாடி 158 ரன்கள் குவித்து, கேகேஆர் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 18 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு அணிகள் மீண்டும் தொடக்க போட்டியில் மோதுகின்றன.

அதே நேரத்தில், கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட் காரணமாக மழை குறித்த கவலை அதிகரித்துள்ளது. ஐபிஎல் விதிகளின்படி இரவு 10.56 மணி வரை நடுவர்கள் காத்திருப்பார்கள். அவ்வளவிற்குள் மழை நின்றால், குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும். மழை தொடர்ந்தால், ஆட்டம் ரத்து செய்யப்படும். இருப்பினும், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிறப்பான கால்வாய் அமைப்பு இருப்பதால், மைதானத்தில் தண்ணீர் தேங்கும் அபாயம் குறைவாக இருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *