கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கொலை, மனைவி மற்றும் காதலன் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூரமான கொலை! ஒரு வருடத்திற்கும் மேலாக காணாமல் போன கணவரின் மர்மத்தை டெல்லி காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. போலீஸ் விசாரணையில் மனைவி மற்றும் அவரது காதலன் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் 32 வயதான மனைவி சோனியா மற்றும் அவரது காதலன் ரோஹித் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கணவனைக் கொன்ற தம்பதியினர், உடலை சாக்கடையில் வீசியுள்ளனர்.
காவல்துறை வட்டாரங்களின்படி, கடந்த ஜூலை மாதம் கணவர் பிரீதம் பிரகாஷ் என்பவரை அவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, உடல் ஒரு சாக்கடையில் வீசப்பட்டது. பின்னர், ஹரியானாவின் சோனிபட்டில் இருந்து சோனியா மற்றும் ரோஹித்தை போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான விஜய் இன்னும் தலைமறைவாக உள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.