ஓசூரில் 6 டன் ரசாயன கலந்த தர்பூசணி பறிமுதல்
March 24, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த சில தினங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர், ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இந்தப் பழங்கள், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் கலந்திருந்ததால், அது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கேடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பழங்களை உணவில் சேர்க்கும் போது அது தனி மனித உடலுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. தர்பூசணியில் ரசாயன கலந்துள்ளதா என கவனமாக சரிபார்த்து வாங்குவதற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.