ஐதராபாத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் அதிரடி கைது மற்றும் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் தீவிரம்

ஐதராபாத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் அதிரடி கைது மற்றும் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் தீவிரம்

தெலுங்கானா சட்டசபையை முற்றுகையிட முயன்ற வேலையில்லா இளைஞர்களை விடுதிகள் மற்றும் நூலகங்களில் புகுந்து போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கோரி இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.

இந்த கைது நடவடிக்கையால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியது. முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பணிகளே தற்போது நிரப்பப்படுவதாகவும், புதிய வேலைவாய்ப்பு காலண்டர் வெளியிடப்படவில்லை என்றும் இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதாகக் கூறி அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *