ஐஏஎஸ் தேர்வில் வென்றதாக கூறி ஊரையே ஏமாற்றிய இளைஞர் மற்றும் அம்பலமான பொய் ரகசியம்
March 16, 2026

பீகார் மாநிலம் ஷேக்புராவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் யுபிஎஸ்சி தேர்வில் 440-வது இடம் பிடித்ததாகக் கூறி கிராம மக்களை நம்ப வைத்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ மற்றும் உள்ளூர் போலீசார் அவருக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாகப் பாராட்டினர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி அந்தப் பகுதியையே பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் இளைஞர்கள் சிலர் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்தபோது அந்த ரேங்க் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு ரஞ்சித் குமாருடையது என்பது தெரியவந்தது. உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர் திட்டமிட்டு ஏமாற்றினாரா அல்லது தவறுதலாக நம்பினாரா என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.