எதிரி நாடுகளின் எல்லைக்குள் 800 கிமீ தூரம் வரை பாய்ந்து தாக்கும் புதிய பிரம்மோஸ் ஏவுகணை

எதிரி நாடுகளின் எல்லைக்குள் 800 கிமீ தூரம் வரை பாய்ந்து தாக்கும் புதிய பிரம்மோஸ் ஏவுகணை

இந்திய எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 800 கி.மீ. தூரம் வரை சென்று இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் நவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. தற்போதுள்ள 450 கி.மீ. இலக்கை விட இருமடங்கு அதிக திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பாய்ந்து எதிரிகளின் ராடார் கண்களில் சிக்காமல் இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது.

இமயமலை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த உள்நாட்டுத் தயாரிப்பு ஏவுகணைகள் முக்கியப் பங்கு வகிக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் விரைவில் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் சுகோய் போர் விமானங்களில் இதைப் பொருத்திச் சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *