ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
March 10, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான காலக்கெடுவை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அமைதி திரும்புவது குறித்து மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், டிரம்பின் இந்த கருத்து உலக நாடுகளிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர்களிடம் ராணுவ வலிமை ஏதும் மிஞ்சவில்லை என்று அவர் கூறினார். எண்ணெய் சந்தையை சீராக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.