இறந்தவர்களுடன் பேச உதவும் விசித்திரமான விண்ட் போன் ஜப்பானில் உள்ள இந்த போன் பூத்தின் ரகசியம் என்ன

ஜப்பானின் ஓட்சுச்சி நகரில் உள்ள ஒரு தனிமையான மலைப்பகுதியில் ‘விண்ட் போன்’ என்ற விசித்திரமான தொலைபேசி பூத் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் இடாரு சசாகி என்பவர் தனது உறவினரை இழந்த துக்கத்தில் இதை உருவாக்கினார். இந்த தொலைபேசியில் இணைப்புகள் எதுவும் இல்லை, ஆனால் மக்கள் தங்கள் இறந்த அன்புக்குரியவர்களிடம் மனது விட்டு பேச இங்கு வருகிறார்கள். இது இழப்பின் வலியைப் போக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது.
மலையின் அமைதியான சூழலில் உள்ள இந்த பூத்திலிருந்து முழு நகரத்தையும் காண முடியும். பலத்த காற்று இந்த போனுக்குள் நுழையும் போது ஏற்படும் ஒருவித ஒலி அலைகள், இறந்தவர்களின் குரலைப் போலவே தோன்றும் என்று சசாகி கூறுகிறார். சாதாரண தொலைபேசியில் சொல்ல முடியாத பல ரகசியங்களை மக்கள் இங்கு வந்து பேசி தங்கள் பாரத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். இந்த விசித்திரமான போன் பூத் உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.