இரவு 10 மணிக்கு மீட்டிங்! விடுமுறையிலும் வேலை அழுத்தம் தாங்காமல் ஊழியர் எடுத்த அதிரடி முடிவு என்ன?

மும்பையைச் சேர்ந்த ஓர் இளம் ஊழியர் ராய்கட் பகுதிக்கு விடுமுறையில் சென்றபோதும், அவருக்கு அலுவலகத்திலிருந்து நிம்மதி கிடைக்கவில்லை. நெட்வொர்க் பிரச்சனை குறித்து முன்னரே தெரிவித்திருந்தபோதிலும், விடுமுறை நாளில் பணி செய்யுமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் நிறுவனர் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு மேல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உத்தரவிட்டார். தனது நிலையை மீண்டும் மீண்டும் விளக்கியபோதும் முதலாளி கேட்க மறுத்ததால், விரக்தியடைந்த அந்த இளைஞர் வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
சமூக ஊடகத்தில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த ஊழியர், தனிப்பட்ட நேரத்தின் மீது நிர்வாகம் காட்டிய அலட்சியம் வேதனை அளிப்பதாகக் கூறினார். மன்னிப்பு கேட்டும், கலந்துகொள்ள முடியாததால் முதலாளி அதிருப்தி தெரிவித்தார். இந்த நியாயமற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பணியை விட்டு விலகும் துணிச்சலான முடிவை அவர் எடுத்தார், இது பணியிடச் சூழல் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.