இந்தியா மீளுமா? பாகிஸ்தான் வீரரின் விஸ்வரூபம்: 348 ரன்கள் இலக்கை நோக்கி திணறும் நீலப்படை!

யு-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி இந்தியா திணறி வருகிறது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பாகிஸ்தானின் சமீர் மின்ஹாஸ் 72 பந்துகளில் சதம் விளாசி, 172 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார். இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டதை சாதகமாக்கிய பாகிஸ்தான் இமாலய ஸ்கோரை எட்டியது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இழந்து 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இக்கட்டான நிலையில் உள்ளது. தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இந்திய அணி தனது 9-வது பட்டத்தை வெல்ல கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. 2012-க்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.