ஆடம்பர திருமணத்திற்கு நோ சொன்ன மணமகன் விதித்த வினோத நிபந்தனைகள் வைரல்

திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், மணமகன் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வினோதமான திருமண விதிகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆடம்பரமான இடங்களையோ அல்லது விலையுயர்ந்த பரிசுகளையோ கோருவதற்குப் பதிலாக, பாரம்பரியம் மற்றும் எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில கடுமையான விதிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் கூடாது, மணப்பெண் லெஹங்கா அணிவதற்கு பதிலாக சேலை தான் அணிய வேண்டும் மற்றும் சத்தமான இசைக்கு அனுமதி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு, அது போட்டோஷூட் அல்ல என்று கூறும் அந்த நபர், பகல் நேரத்திலேயே திருமணத்தை முடித்து மாலைக்குள் விடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார். மேடையில் தாலி கட்டும் போது மணமக்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்றும், மணமக்களை கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ வற்புறுத்துபவர்களை மண்டபத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகள் இணையத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.