அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவு, புதிய Su-34 போர் விமானத்தை பெற்றுக்கொண்ட ரஷ்ய இராணுவம்

ரஷ்ய இராணுவத்திற்கு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட Su-34 போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) இந்த சக்திவாய்ந்த விமானத்தை ரஷ்ய விண்வெளிப் படைகளுக்கு (VKS) சமீபத்தில் விநியோகித்தது. தரை மற்றும் விமான சோதனைகளுக்குப் பிறகு, இந்த விமானம் VKS குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம், எந்தச் சூழ்நிலையிலும், இரவிலும் பகலிலும், துல்லியமாக எதிரிகளின் இலக்குகளைத் தாக்கக்கூடியது. இதன் சேர்க்கை ரஷ்யாவின் இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Su-34 போர் விமானம் நேட்டோவால் ‘ஃபுல்பேக்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது இரண்டு இன்ஜின்களைக் கொண்ட, இரண்டு இருக்கைகள் கொண்ட, அனைத்து பருவநிலைகளிலும் செயல்படக்கூடிய சூப்பர்சோனிக் விமானமாகும். இந்த விமானம் எதிரிகளின் விமான பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி, உள்ளே நுழைந்து துல்லியமாக குண்டு வீசுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, தற்போது ரஷ்யாவிடம் சுமார் 120 முதல் 200 Su-34 விமானங்கள் உள்ளன, இது உலகளாவிய இராணுவ சக்தியை புதிய முறையில் மாற்றியமைக்கக்கூடும்.