அணு ஆயுதங்களை உருவாக்க பயங்கரவாதிகள்! AI குறித்து சீனாவிளிருந்து பயங்கர எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன், புதிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. அணு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் போன்ற பேரழிவு தரும் ஆயுதங்களை உருவாக்க பயங்கரவாதிகளுக்கு AI உதவும் என்று சீனா சமீபத்திய ஆவணத்தில் எச்சரித்துள்ளது. AI-யின் ‘retrieval-augmented generation’ நுட்பத்தைப் பயன்படுத்தி, இணையத்தில் இருந்து ஆயுதங்களை உருவாக்கும் கோட்பாடு மற்றும் வடிவமைப்பை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கண்டறிய முடியும் என்று அந்த ஆவணம் கூறுகிறது.
அத்தகைய ஒரு சூழ்நிலை, தற்போதுள்ள பாதுகாப்பு அமைப்புகளை பயனற்றதாக்கி, உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று சீனா மேலும் கூறியுள்ளது. இதற்கு முன்பு, ராணுவம் மற்றும் பொதுமக்களின் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய AI-யின் ‘இரட்டைப் பயன்பாட்டு’ தொழில்நுட்பம் குறித்து சீனா கவலை தெரிவித்திருந்தது. சமீபத்திய அறிக்கை இந்த அச்சுறுத்தலை மேலும் தெளிவாக எடுத்துரைக்கிறது.