அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு
March 20, 2025

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இதன் அடிப்படையில், இன்று முதல் மார்ச் 25 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.